search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் சாமியார்"

    • அறிவியல் வளர்ச்சியில் விண்ணைத் தொடும் அளவிற்கு சென்று கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் பெண் சாமியார் ஆவியோடு பேசுவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சாமி முன்பு குடும்பத்தினரை அமர வைத்து ஒரு விதமான பூஜைகளை பெண் சாமியார் செய்தார்.

    ஆரணி:

    அமானுஷ்ய சக்திகளை கொண்ட பலவிதமான சாமியார்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

    இறந்தவர்களின் ஆவியை தனது உடலுக்குள் இறக்கி அந்த ஆவியை தனது குடும்பத்தினருடன் பேச வைத்து அதிசயத்தை நிகழ்த்தி வருகிறார் பெண் சாமியார் வடிவாம்பாள்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அத்திமலை பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவாம்பாள்.

    இவர் அந்த கிராமத்தில் ஓம் சக்தி மாரியம்மன் சக்தி பீடம் நிறுவி பக்தர்களுக்கு குறி சொல்லி வருகிறார். எங்கும் இல்லாத அதிசயமாக அவர் இறந்தவர்களின் ஆவியை உனது உடலில் வரவழைத்து ஆவியோடு குடும்பத்தினரை பேச வைக்கிறார்.

    கடந்த வெள்ளிக்கிழமை வடிவாம்பாள் வீட்டில் பூஜைகளை செய்து கொண்டிருந்தார். அவரை தேடி ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது ஒரு குடும்பத்தினர் வீட்டில் இறந்தவருடன் பேச வேண்டும் என கூறினர்.

    அவர்கள் வீட்டில் இறந்தது யார் என்பதை தெரிவிக்கவில்லை. மேலும் இறந்தவருக்கு தாங்கள் என்ன உறவு முறை என்பதையும் அவர்கள் கூறவில்லை. அதனை பெண் சாமியாரும் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை. சாமி முன்பு குடும்பத்தினரை அமர வைத்து ஒரு விதமான பூஜைகளை பெண் சாமியார் செய்தார்.

    அப்போது திடீரென அவர் தரையில் சாய்ந்து கூச்சலிட்டார். உடலை குலுக்கி ஆடியபடி அந்த குடும்பத்தினருடன் விபத்தில் இறந்த வாலிபர் வந்திருக்கிறேன் என கதறியபடி கூறினார்.

    அப்போது இறந்த வாலிபரின் குரலில் உடலை அசைத்தபடி பேசினார்.

    இதனை கேட்டதும் அந்த குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள்.

    மேலும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். வாலிபர் பெயரை கூறி அவர்கள் மாறி மாறி அழைத்தனர். அப்போது பெண் சாமியார் விபத்தில் இறந்த வாலிபர் போலவே பேசினார்.

    அங்கு வந்த குடும்பத்தினரிடம் அண்ணா, அண்ணி என உறவு முறை கூறி அழைத்தார். வாலிபர் விபத்தில் எப்படி இறந்தார் என்பதை பெண் சாமியார் தத்ரூபமாக தரையில் விழுந்து செய்து காட்டினார். அதனை கண்டதும் ஆவியோடு பேச வந்திருந்த குடும்பத்தினர்கள் அழுது துடித்தனர். மேலும் பெண் சாமியார் மூலம் வாலிபரின் ஆவியோடு குடும்பத்தினர் பேசினர்.

    அதனைத் தொடர்ந்து பெண் சாமியார் இயல்பு நிலைக்கு திரும்பினார். தேங்காய், எலுமிச்சை, அரிசி போன்றவற்றை அந்த குடும்பத்தினரிடம் கொடுத்தார்.

    அதனை இறந்து போன வாலிபர் போட்டோ முன்பு வைத்து பூஜை செய்தால் அவர் ஆவி எப்போதும் உங்களோடு இருக்கும் என கூறி அனுப்பி வைத்தார்.

    இதனை கண்டு அங்கிருந்து மற்ற பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து பெண் சாமியார் வடிவாம்பாள் கூறுகையில்:-

    எனக்கு 4 வயதாக இருக்கும் போது அம்மன் அருள்வாக்கு கிடைத்தது. அப்போதே எனது உடலில் அம்மன் அருள் இருப்பதை உணர முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சுற்று சுவர் அதிகம் உள்ள எனது வீட்டிற்குள் அதிக அளவில் பாம்புகள் வரத் தொடங்கின. அப்போது நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தேன். பாம்புகள் வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திடீரென எங்கள் வீட்டுக்குள் பாம்பு புற்று உருவானது. இதன் மூலம் அம்மன் வீட்டில் குடி கொண்டதாக எண்ணினோம். தினமும் அந்த பாம்பு புற்றுக்கு பூஜைகள் செய்தேன்.

    எனக்கு அருள்வாக்கு கூறும் சக்தி கிடைத்ததும். பில்லி சூனியம் எடுப்பது ஆவிகளை விரட்டுவது போன்ற பூஜைகளை செய்து வந்தேன். அதற்குப் பிறகு ஆவிகளோடு பேசும் சக்தி கிடைத்தது.

    இது அதிக அளவு பரவியது. தற்போது பக்தர்கள் எனது இடத்திற்கு வந்து இறந்தவர்களின் ஆவியுடன் பேசி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அறிவியல் வளர்ச்சியில் விண்ணைத் தொடும் அளவிற்கு சென்று கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் பெண் சாமியார் ஆவியோடு பேசுவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×